sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

12,500 லி., நீர் பிடிக்கும் வாகனங்கள் தீயணைப்பு துறை கொள்முதல்

/

12,500 லி., நீர் பிடிக்கும் வாகனங்கள் தீயணைப்பு துறை கொள்முதல்

12,500 லி., நீர் பிடிக்கும் வாகனங்கள் தீயணைப்பு துறை கொள்முதல்

12,500 லி., நீர் பிடிக்கும் வாகனங்கள் தீயணைப்பு துறை கொள்முதல்


ADDED : மே 09, 2025 12:47 AM

Google News

ADDED : மே 09, 2025 12:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக தீயணைப்பு துறைக்கு அதிநவீன வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் தற்போது, ஏழு கோடி ரூபாய் செலவில், 10 'வாட்டர் பவுசர்' வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தீயணைப்பு துறை அலுவலர் கூறியதாவது:

தீயணைப்பு துறையில், தற்போது பயன்படுத்தும் வாகனங்களில், 5,500 லிட்டர் தண்ணீரை மட்டுமே எடுத்துச்செல்ல முடியும்.

இதனால், பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டால், தண்ணீரின்றி தவிக்கும் நிலை ஏற்படுகிறது. குடிநீர் வாரிய லாரிகளை வரவழைத்து, தீயணைப்பு வாகனங்களுக்கு தண்ணீர் ஏற்றி, அதன் பின் தீயை அணைக்க வேண்டியுள்ளது.

இதற்கு தீர்வு காணும் விதமாக தற்போது, 12,500 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு உடைய தீயணைப்பு வாகனங்களை கொள்முதல் செய்துள்ளோம். பெரிய அளவில் தீ விபத்து ஏற்படும் இடங்களில், இந்த வகை வாகனங்கள் பயன்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us