sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மஞ்சள் நிறமாக மாறிய எண்ணுார் முகத்துவாரம் ரசாயன கலப்பு என மீனவர்கள் குற்றச்சாட்டு

/

மஞ்சள் நிறமாக மாறிய எண்ணுார் முகத்துவாரம் ரசாயன கலப்பு என மீனவர்கள் குற்றச்சாட்டு

மஞ்சள் நிறமாக மாறிய எண்ணுார் முகத்துவாரம் ரசாயன கலப்பு என மீனவர்கள் குற்றச்சாட்டு

மஞ்சள் நிறமாக மாறிய எண்ணுார் முகத்துவாரம் ரசாயன கலப்பு என மீனவர்கள் குற்றச்சாட்டு


ADDED : ஏப் 25, 2025 12:12 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 12:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எண்ணுார், சென்னை, எண்ணுார் முகத்துவாரத்தை ஒட்டிய கழிமுக பரவல் பகுதி முழுதும், மஞ்சள், கறுப்பு நிறமாக மாறி காட்சியளிப்பதால், ரசாயன கழிவு கலப்பு உள்ளதாக, மீனவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

அதன்படி ஓரிரு ஆண்டுகளுக்கு முன், முகத்துவாரம் மஞ்சள் நிறமாக மாறிய விவகாரம், விஸ்வரூபம் எடுக்கவே, மாசு கட்டுப்பாட்டு வாரியம் முகாமிட்டு, மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தினர். ஆனால், முடிவுகள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேற்று மதியம் முகத்துவாரம் மற்றும் கழிமுகம் பரவல் முழுதும், மஞ்சள் நிறமாக காட்சியளித்தது. சிலர் சட்டவிரோதமாக ரசாயன கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டுவதால், இதுபோன்ற நிறம் மாறுவதாக மீனவர்கள் அஞ்சுகின்றனர்.

இதனால், மீன்கள் இனப்பெருக்க இடமாக கருதப்படும் முகத்துவாரம் முழுதும் பாழாய் போய்விடும். இனப்பெருக்கம் என்பதே இருக்காது. மீனவர்களின் வாழ்வாதாரமும், அடியோடு பாதிக்கும் என, கவலை தெரிவிக்கின்றனர்.

மவுனம் சாதிக்கும் மாசு கட்டுபாட்டு வாரியம் கவனித்து, நீர்நிலைகளில் ரசாயன கழிவுகள் கலக்கப்படுகிறதா; முகத்துவாரத்தில் மீன்வளம் பாதிக்க வாய்ப்பு உள்ளதா என்பதை ஆய்வின் மூலம், மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது

யார் காரணம் ?

பகிங்ஹாம் கால்வாய் ஒட்டியே, பல ரசாயன தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. 2023ம் ஆண்டு, வெள்ளநீரில் எண்ணெய் கழிவு கலந்ததும் பகிங்ஹாம் கால்வாய் வழியாக தான். எனவே, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், பகிங்ஹாம் கால்வாய் ஒட்டிய ரசாயன தொழிற்சாலைகளில் இருந்து, கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். மீறும் நிறுவனங்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.- குமார், சமூக ஆர்வலர்.எண்ணுார்.








      Dinamalar
      Follow us