தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/கட்டுமான கம்பி திருடிய ஐவர் கைது

கட்டுமான கம்பி திருடிய ஐவர் கைது

கட்டுமான கம்பி திருடிய ஐவர் கைது


ADDED : மார் 01, 2024 12:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2024 12:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓட்டேரி, புளியந்தோப்பு அருகே, அம்பேத்கர் கல்லுாரி சாலையிலிருந்து வியாசர்பாடி வரையிலான மேம்பால கட்டுமான பணியில், வடமாநிலத்தவர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 21ம் தேதி இரவு 11:00 மணியளவில், மர்ம நபர் ஒருவர், பணியில் இருந்த வடமாநில பணியாளர்களை மிரட்டி பணம், மொபைல்போன், இரும்பு பொருட்களை திருடிச் சென்றார்.

இதனால், பணியாளர்கள் பலர் வேலையை விட்டு, சொந்த ஊருக்கு கிளம்பினர்.

இதுகுறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில், கட்டுமான பணி மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதை விசாரித்த போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட புளியந்தோப்பு 'தெனாலி' உதயகுமார், 24, 'டோலு' செல்வகுமார், 24, சத்தியவாணி முத்து நகர் தனுஷ், 18, ராஜேஷ்,18 மற்றும் 17 வயது வாலிபர் உட்பட ஐவரை கைது செய்தனர். சபரி என்பவர் தலைமறைவானார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us