/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு 3 இடங்களில் அன்னதான குடில்
/
பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு 3 இடங்களில் அன்னதான குடில்
பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு 3 இடங்களில் அன்னதான குடில்
பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு 3 இடங்களில் அன்னதான குடில்
ADDED : பிப் 07, 2025 12:40 AM
சென்னை,தைப்பூசத்திற்கு விரதமிருந்து பாதயாத்திரையாக பழனி செல்லும் பக்தர்களுக்காக, திண்டுக்கல், வேடசந்துார், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில், பழநி முருகன் அன்னதான குடில் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த அன்னதானக் குடில், தமிழகம் முழுதுமுள்ள முருக பக்தர்களால் ஒன்றிணைந்து நடத்தப்படுகிறது.
திண்டுக்கல்லில் வரும் 7ம் தேதி இரவு சிற்றுண்டியும், 8ம் தேதி வேடசந்துார் அருகே, சாலையூர் நால் ரோட்டில் முதல் முறையாக அமைய உள்ள குடிலில், காலை சிற்றுண்டி, மதிய சாப்பாடு வழங்கப்படுகிறது.
ஒட்டன்சத்திரம் கே.டி., மஹாலில், பிப்., 8 மாலை 5:00 மணிக்கு துவங்கி, பிப்.,9 மாலை வரை நடக்கிறது.
மாலை காபி, இரவு சிற்றுண்டி, அதிகாலை காபி, காலை சிற்றுண்டி, மதியம் தலை வாழை இலையில் சாப்பாடு, மற்றும் 6,000 துணி பைகளில் பழங்கள் பிஸ்கட் வழங்கப்படுகிறது. இந்த குடிலை, 15வது ஆண்டாக நடத்துகின்றனர்.
பழனிக்கு அதிக ஆண்டுகளாக பாதயாத்திரையாக வரும் பக்தர்கள்தான் குத்துவிளக்கு ஏற்றி அன்னதானத்தை துவக்கி வைக்கின்றனர். மருத்துவ முகாமும் நடத்தப்படுகிறது. இதில், மருந்து மாத்திரை தருவதுடன், மசாஜ் வசதியும் செய்யப்படுகிறது.
இந்த தகவலை, குடில் அறங்காவலர்களான மணிவண்ணன், மணிவாசகம் ஆகியோர் தெரிவித்தனர்.
மேலும் தொடர்புக்கு, 98421 98889, 99443 09719 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

