/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் இணைப்பு வழங்க லஞ்சம் 'மாஜி' அதிகாரிக்கு 3 'ஆண்டு'
/
மின் இணைப்பு வழங்க லஞ்சம் 'மாஜி' அதிகாரிக்கு 3 'ஆண்டு'
மின் இணைப்பு வழங்க லஞ்சம் 'மாஜி' அதிகாரிக்கு 3 'ஆண்டு'
மின் இணைப்பு வழங்க லஞ்சம் 'மாஜி' அதிகாரிக்கு 3 'ஆண்டு'
ADDED : டிச 31, 2024 12:51 AM
காஞ்சிபுரம், டி
காஞ்சிபுரம், இந்திரா அவென்யூ, அசோக் நகரைச் சேர்ந்தவர் பரணிதரன். இவர், தன் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க கேட்டு, கடந்த 2010ல், ரயில்வே சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
அப்போது, மின்வாரிய செயற்பொறியாளராக பணிபுரிந்த பஞ்சாட்சரத்தை, கடந்த 2010 நவ., 15ம் தேதி நேரில் சந்தித்து கேட்டுள்ளார். பஞ்சாட்சரம், 10,000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.
உடனே பரணிதரன், காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார், 2010 நவ., 19ம் தேதி ரசாயனம் தடவிய 10,000 ரூபாயை பரணிதரனிடம் கொடுத்து அனுப்பினர்.
லஞ்ச பணத்தை பரணிதரனிடம் இருந்து, பஞ்சாட்சரம் வாங்கியபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். இவ்வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி வசந்தகுமார், பஞ்சாட்சரத்திற்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
பொறியாளருக்கு சிறை
சோழிங்கநல்லுாரைச் சேர்ந்த லயோலா பிரான்சிஸ் என்பவர், சிறுசேரி கிராமத்தில், புதிதாக ஏழு வீடுகள் கட்டினார். வீடுகளுக்கு தனித்தனியே மின் இணைப்பு கோரி, சிறுசேரி மின்வாரிய அலுவலகத்தில், 2014ம் ஆண்டு விண்ணப்பித்தார்.
அவர், ஒரு மின் இணைப்பிற்கு 5,000 ரூபாய் என, மொத்தம்,35,000 ரூபாய் லஞ்சம் தரும்படி, உதவி பொறியாளர் கருணாகரன் கேட்டுள்ளார். பின், 28,000 ரூபாய் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத லயோலா பிரான்சிஸ், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். பணத்தை கொடுத்தபோது, மறைந்திருந்த போலீசார் கையும் களவுமாக, கருணாகரனை, 46, கைது செய்தனர். செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயஸ்ரீ முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் கவிதா ஆஜரானார்.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், கருணாகரனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால், ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து, நீதிபதி ஜெயஸ்ரீ, நேற்று தீர்ப்பளித்தார்.

