sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில்   ரூ.17.47 கோடியில் 3 ராஜகோபுரத்திற்கு அடிக்கல்

/

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில்   ரூ.17.47 கோடியில் 3 ராஜகோபுரத்திற்கு அடிக்கல்

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில்   ரூ.17.47 கோடியில் 3 ராஜகோபுரத்திற்கு அடிக்கல்

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில்   ரூ.17.47 கோடியில் 3 ராஜகோபுரத்திற்கு அடிக்கல்


ADDED : மே 02, 2025 11:47 PM

Google News

ADDED : மே 02, 2025 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை :திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில், கருவறை வாசற்கால் நிறுவுதல், 17.47 கோடி ரூபாயில் மூன்று புதிய ராஜகோபுரங்கள், முகப்பு மண்டபங்களுக்கான கட்டுமான பணிகளுக்கு, அமைச்சர்கள் சேகர்பாபு, நாசர் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

பின், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில், 70.27 கோடி ரூபாயில், ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின்கீழ் திருப்பணிகள் நடந்து வருகின்றன.

அதில், கோவில் நிதி வாயிலாக, ஆறு கோடி ரூபாயில் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம்; 4.80 கோடி ரூபாயில் அன்னதானக் கூடம் விரிவாக்கம்; 42 கோடி ரூபாயில் ஒருங்கிணைந்த பெருந்திட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், உபயதாரர் நிதி, 12 கோடி ரூபாயில் உபசன்னிதிகள், கிழக்கு முன் மண்டபம், கொடிமர மண்டபம், யாகசாலை மண்டபம் அமைத்தல்; 5.47 கோடி ரூபாயில், மேற்கில் ஐந்து நிலை ராஜகோபுரம், வடக்கு மற்றும் தெற்கில் மூன்று நிலை ராஜகோபுரங்கள் அமைக்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டு உள்ளன.

இக்கோவிலில், 19 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடத்தும் வகையிலும், அடுத்த 50 ஆண்டுகளுக்கு கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்தும் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப், ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

***






      Dinamalar
      Follow us