ADDED : பிப் 24, 2024 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை விமான நிலையத்தில் இருந்து, சென்ட்ரல் வரை செல்லும் மெட்ரோ ரயில், நேற்று இரவு கோயம்பேடு நிலையத்தில் நின்றது. அப்போது, இருக்கையின் மேலிருந்த கண்ணாடிகள், திடீரென உடைந்து சிதறியது.
இதில், நான்கு பயணியருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அங்கிருந்தோர் அவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர். கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.