sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கூவத்தில் கொட்டப்படும் குப்பை கரையோரத்தில் வசிப்போர் அட்டூழியம்

/

கூவத்தில் கொட்டப்படும் குப்பை கரையோரத்தில் வசிப்போர் அட்டூழியம்

கூவத்தில் கொட்டப்படும் குப்பை கரையோரத்தில் வசிப்போர் அட்டூழியம்

கூவத்தில் கொட்டப்படும் குப்பை கரையோரத்தில் வசிப்போர் அட்டூழியம்

1


ADDED : ஜன 21, 2025 12:41 AM

Google News

ADDED : ஜன 21, 2025 12:41 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமைந்தகரை, கூவத்தின் கரையோரத்தில் வசிக்கும் வீடுகளின் சேகரமாகும் குப்பைகளை, கூவம் ஆற்றில் வீசுவதால் சீர்கேடு நிலவுகிறது.

அண்ணா நகர் மண்டலம், அமைந்தகரை - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கூவம் ஆறு செல்கிறது. இதன் கரையோரத்தில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்கள் உள்ளன.

இப்பகுதியில் வசிப்போர், தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பையை முறையாக அகற்றாமல், கூவம் கரையோரத்தில் துாக்கி வீசுகின்றனர். இதனால், கூவம் கரையோரம் முழுவதும், குப்பையாக காட்சியளிக்கிறது.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

கூவம் ஆற்றை, சம்பந்தப்பட்ட துறையினர் முறையாக பராமரிப்பது கிடையாது. குறிப்பாக, அமைந்தகரை காவல் நிலையம் அருகில் உள்ள கூவம் கரையோரத்தில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.

அதேபோல், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கூவத்தில், குப்பை குவிந்து கிடக்கிறது. கரையோரத்தில் போதிய தடுப்பு நடவடிக்கை இல்லாததால், சமூக விரோத செயல்கள் நடக்கின்றன.

குப்பையை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us