sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பள்ளி அருகே தேங்கும் குப்பை மாற்றுத்திறனாளி குழந்தைகள் அவதி

/

பள்ளி அருகே தேங்கும் குப்பை மாற்றுத்திறனாளி குழந்தைகள் அவதி

பள்ளி அருகே தேங்கும் குப்பை மாற்றுத்திறனாளி குழந்தைகள் அவதி

பள்ளி அருகே தேங்கும் குப்பை மாற்றுத்திறனாளி குழந்தைகள் அவதி


ADDED : மார் 14, 2024 12:38 AM

Google News

ADDED : மார் 14, 2024 12:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.பி.,சத்திரம், அரசு உதவிபெறும் சிறப்பு பள்ளியின் அருகில், சாலையோரத்தில் தேங்கும் குப்பை மற்றும் திறந்தவெளி வடிகாலால், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நோய் தொற்றும் அபாயம் நிலவுகிறது.

அண்ணா நகர் மண்டலத்தில், டி.பி.,சத்திரம் பகுதி உள்ளது. இப்பகுதியில் சேகரமாகும் குப்பையை சேகரிக்க, சாலையோரத்தில் இரண்டு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

தினசரி குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபடும் மாநகராட்சி ஊழியர்கள், குப்பையை எடுத்துவிட்டு, சாலையின் நடுவே தொட்டிகளை நிறுத்திவிட்டுச் செல்கின்றனர்.

இதனால், விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. அதேபோல், சாலையில் சிதறியுள்ள குப்பையால் சுகாதார சீர்கேடும் நிலவுகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

டி.பி.,சத்திரம், ஐந்தாவது தெருவில், மாநகராட்சியினர் முறையாக குப்பையை கையாளுவது கிடையாது. குப்பையை எடுத்து விட்டு, சாலையின் நடுவே நிறுத்தப்படும் தொட்டிகளால், இரு சக்கர வாகன ஓட்டிகள், நிலை தடுமாறி காயமடைகின்றனர்.

அதேபோல், குப்பை கழிவுகளை சரிவர எடுக்காததால், சாலை முழுதும் சிதறி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

தொட்டிகள் அருகில் செயல்படும் அரசு உதவிபெறும் சிறப்பு பள்ளியில், ஏராளமான மாற்றுத்திறனாளி குழந்தைகள் படிக்கின்றனர்.

சாலையில் தேங்கும் குப்பை மற்றும் அதன் அருகில் திறந்து கிடக்கும் மழைநீர் வடிகாலில் இருந்து, கடும் துர்நாற்றமும் வீசுகிறது.

இதனால், எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, நோய் தொற்றும் அபாயம் நிலவுகிறது. இதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us