sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கூவம் கரையில் குப்பை குவிப்பு அமைந்தகரையில் அட்டூழியம்

/

கூவம் கரையில் குப்பை குவிப்பு அமைந்தகரையில் அட்டூழியம்

கூவம் கரையில் குப்பை குவிப்பு அமைந்தகரையில் அட்டூழியம்

கூவம் கரையில் குப்பை குவிப்பு அமைந்தகரையில் அட்டூழியம்


ADDED : நவ 11, 2024 01:40 AM

Google News

ADDED : நவ 11, 2024 01:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமைந்தகரை:கூவத்தின் கரையோரத்தில் வசிக்கும் வீடுகளின் சேகரமாகும் குப்பை கூவம் ஆற்றில் வீசப்படுவதால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது.

அண்ணா நகர் மண்டலம், அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கூவம் ஆறு செல்கிறது.

இதன் கரையோரத்தில் ஏராளமான வீடுகள் மற்றும் நிறுவனங்கள் உள்ளன.

இங்குள்ள வீடுகளில் வசிப்பர்கள், தங்களது வீடுகளில் சேகராமாகும் குப்பையை முறையாக அகற்றாமல், கூவம் கரையோரத்தில் வீசி விடுகின்றனர். இதனால், கூவம் கரையோரம் முழுதும், குப்பையாக காட்சியளிக்கிறது.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

கூவம் ஆற்றை, சம்பந்தப்பட்ட துறையினர் முறையாக பராமரிப்பது கிடையாது. குறிப்பாக, அமைந்தகரை காவல் நிலையம் அருகில் உள்ள கூவம் கரையோரத்தில், நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. அதேபோல், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கூவத்தில் குப்பை குவிந்து கிடக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us