ADDED : ஜூன் 19, 2025 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று கண்காணிப்பு பணியில் இருந்தனர். நடைமேடைகளில் சோதனை நடத்தியபோது, யாரும் உரிமை கோராத 20 ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன. இதில் மொத்தம், 400 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இந்த அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
எழும்பூர் வழியாக ஆந்திராவுக்கு செல்ல இருந்த விரைவு ரயிலில், ரேஷன் அரிசியை கடத்த முயன்றவர்கள் யார் என, ரயில்வே பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர். இந்த ஒரு மாதத்திற்குள், எழும்பூர் ரயில் நிலையத்தில் மட்டும், ரயில்வே பாதுகாப்பு படையினர், 3,000 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
***