sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கோவில் உண்டியல் உடைத்து திருட்டு

/

கோவில் உண்டியல் உடைத்து திருட்டு

கோவில் உண்டியல் உடைத்து திருட்டு

கோவில் உண்டியல் உடைத்து திருட்டு


ADDED : ஆக 27, 2025 12:25 AM

Google News

ADDED : ஆக 27, 2025 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொரட்டூர், கொரட்டூர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, 26வது தெருவில், சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. கோவிலினுள் தேவி முத்துமாரியம்மன் மற்றும் அங்காளபரமேஸ்வரி சன்னிதிகளும் உள்ளன.

முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், தற்போது அ.ம.மு.க., மாவட்ட செயலருமான வேதாச்சலம் என்பவர், கோவிலை நிர்வகித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் கோவிலின் முன்பக்க கதவை, கோவில் பூசாரி பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின், நேற்று அதிகாலை கோவில் நடையை திறந்த பூசாரி, உள்ளே சென்று பார்த்தபோது, சீரடி சாய்பாபா கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 5,000 ரூபாய் பணம் திருடப்பட்டது தெரிந்தது.

இது குறித்து, கொரட்டூர் போலீசில் வேதாச்சலம் புகார் அளித்தார். கோவிலில் உள்ள 'சிசிடிவி' கேமராக்கள் பழுதானதால், அருகில் உள்ள குடியிருப்புகளின் 'சிசிடிவி' கேமரா பதிவுகளின்படி போலீசார் விசாரிக்கின்றனர்.

முதற்கட்ட விசாராணையில், கோவிலின் முதல் மாடியில் உள்ள கதவு பூட்டப்படாமல் இருந்ததும், அதன் வழியாக இறங்கிய மர்ம நபர்கள், கோவிலுக்குள் வந்து திருடிச்சென்றதும் தெரிந்தது.






      Dinamalar
      Follow us