sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நகர்ப்புற வனம் அமைக்க ரூ.5 கோடி ஒப்படைப்பு

/

நகர்ப்புற வனம் அமைக்க ரூ.5 கோடி ஒப்படைப்பு

நகர்ப்புற வனம் அமைக்க ரூ.5 கோடி ஒப்படைப்பு

நகர்ப்புற வனம் அமைக்க ரூ.5 கோடி ஒப்படைப்பு


ADDED : பிப் 23, 2024 11:47 PM

Google News

ADDED : பிப் 23, 2024 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரியில் நகர்ப்புற வனம் அமைக்கும் பணிக்காக, சி.எம்.டி.ஏ., சார்பில், 5 கோடி ரூபாய் நிதி, வனத்துறையிடம் நேற்று அளிக்கப்பட்டது.

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ., சார்பில், பல்வேறு திட்டங்கள் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டன.

இதன்படி, பழைய மாமல்லபுரம் சாலையிலுள்ள சிறுசேரியில், நகர்ப்புற வனம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக, 5 கோடி ரூபாய் சி.எம்.டி.ஏ., நிதி, வனத்துறையின் தமிழக பசுமை, காலநிலை நிறுவனத்திடம், நேற்று ஒப்படைக்கப்பட்டது.

தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சி.எம்.டி.ஏ.,வுக்கான அமைச்சர் சேகர்பாபு, இதற்கான காசோலையை வனத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம் ஒப்படைத்தார்.

வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாஹூ, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் சமயமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us