sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

எல்லையம்மன் கோவில் தெரு வடிகால்வாய் பணிக்காக மூடல்

/

எல்லையம்மன் கோவில் தெரு வடிகால்வாய் பணிக்காக மூடல்

எல்லையம்மன் கோவில் தெரு வடிகால்வாய் பணிக்காக மூடல்

எல்லையம்மன் கோவில் தெரு வடிகால்வாய் பணிக்காக மூடல்


ADDED : ஜூன் 06, 2025 12:00 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம் மண்டலத்தில், 2021ல் பெய்த கனமழையின் போது வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது. இதை தடுக்க, மண்டலத்தின் 16 வார்டுகளில் 180 கோடி ரூபாயில் மழைநீர் வடிகால்வாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அடுத்தடுத்த மழைக்காலம், நிதி ஒதுக்குவதில் தாமதம் உள்ளிட்டவற்றால் தடைபட்ட பணிகள், தற்போது மீண்டும் நடந்து வருகின்றன.

அதன்படி, மேற்கு மாம்பலம், 140வது வார்டு எல்லையம்மன் கோவில் தெருவில், 1.60 கோடி ரூபாய் செலவில், 455 மீட்டர் துாரத்திற்கு மழைநீர் வடிகால்வாய் அமைத்து, அதை ரெட்டிகுப்பத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரதான கால்வாயில் இணைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த பணிக்காக, எல்லையம்மன் கோவில் தெரு மற்றும் கோவிந்தன் சாலை சந்திப்பு அருகே, பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால், இவ்வழியே வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அசோக் நகர், கே.கே., நகரில் இருந்து கோவிந்தன் சாலை, எல்லையம்மன் கோவில் தெரு வழியாக தி.நகர் செல்லும் வாகனங்கள், கோதண்டராமர் கோவில் தெரு வழியாக செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

வாகன ஓட்டிகள், பகுதிவாசிகள் கூறியதாவது:

அசோக் நகரில் இருந்து தி.நகர் செல்ல, எல்லையம்மன் கோவில் தெருவை அதிகம் பயன்படுத்தி வந்தோம். தற்போது, மழைக்காலத்தில் இச்சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால்வாய் அமைக்க, பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

ஒரு மாதத்தில் பணி முடிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதற்குள் முடிக்கவில்லை என்றால், மழைக்காலத்தில் சகதியாக மாறி, பெரிதும் சிரமம் ஏற்படும். பணியை விரைந்து முடிக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us