/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குரலுக்கு சொந்தக்காரர் இவர் தான்!
/
குரலுக்கு சொந்தக்காரர் இவர் தான்!
ADDED : ஜன 17, 2024 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நந்தனத்தில் நடந்து வரும் புத்தக காட்சியில் 2 நிமிடங்களுக்கு ஒருமுறை, புத்தக காட்சியின் சிறப்புகள், புத்தகங்கள், இன்றைய பேச்சாளர்கள், தொலைந்துபோன சாவிகள், இடையூறாக உள்ள வாகனங்கள் என, அடிக்கடி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தெளிவான உச்சரிப்பில் ஒலித்துக்கொண்டே இருக்கும் குரலுக்கு சொந்தக்காரர் திருநங்கை ஜென்சி, 29.
கடந்த 12 ஆண்டுகளாக, புத்தக காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வரும் இவர், ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டமும், சூழலியலில் ஆங்கில வழியில் முனைவர் பட்டமும் பெற்றவர்.
இவர், வியார்பாடியில் உள்ள அம்பேத்கர் அரசு கல்லுாரியில் ஆங்கில விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.

