sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

டைடல் பார்க் 'யு' வடிவ மேம்பாலத்தில் ஏற திணறும் கனரக வாகனங்களால் நெரிசல்

/

டைடல் பார்க் 'யு' வடிவ மேம்பாலத்தில் ஏற திணறும் கனரக வாகனங்களால் நெரிசல்

டைடல் பார்க் 'யு' வடிவ மேம்பாலத்தில் ஏற திணறும் கனரக வாகனங்களால் நெரிசல்

டைடல் பார்க் 'யு' வடிவ மேம்பாலத்தில் ஏற திணறும் கனரக வாகனங்களால் நெரிசல்


ADDED : மே 02, 2025 12:10 AM

Google News

ADDED : மே 02, 2025 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, திருவான்மியூர், தரமணி, மத்திய கைலாஷ், துரைப்பாக்கம் பகுதிகளை இணைக்கும் சந்திப்பாக டைடல் பார்க் உள்ளது. ஐ.டி., நிறுவனங்கள் உள்ளதால், இங்கு போக்குவரத்து நெரிசல் அதிகம்.

நெரிசலை தடுக்க, திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ் மற்றும் சி.எஸ்.ஐ.ஆர்., சாலை நோக்கி வாகனங்கள் செல்லும் வகையில், 18 கோடி ரூபாயில், ‛யு' வடிவ மேம்பாலம் கட்டி, கடந்த பிப்., மாதம் திறக்கப்பட்டது.

இந்த மேம்பாலம் அருகில், திருவான்மியூர் - தரமணி மேம்பால ரயில் தண்டவாளம், ஓ.எம்.ஆர்., குறுக்கே செல்கிறது.

முதலில் யு வடிவ மேம்பாலம், ரயில் தண்டவாளத்தை கடந்து, பேஷன் டெக்னாலஜி அருகில் அமைப்பதாக இருந்தது.

அங்கு, மெட்ரோ ரயில் சுரங்க ரயில் நிலையம் மற்றும் சுரங்கத்தில் இருந்து, எஸ்.ஆர்.பி., டூல்ஸ் சந்திப்பு சாலையில் ஏறும் பகுதி உள்ளதால், அங்கு மேம்பாலம் அமைக்கவில்லை.

தற்போது கட்டிய மேம்பாலத்தில், திருவான்மியூரில் இருந்து ஏறி செல்ல, பகிங்ஹாம் கால்வாயில் பில்லர் அமைத்து நேராக செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

ஆனால், பகிங்ஹாம் கால்வாயில் நீரோட்டம் தடைபடும் என, பில்லர் அமைக்க பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது. இதனால், வளைவாக சென்று மேம்பாலத்தில் ஏறும் வகையில் வடிவமைத்து, தற்போது கட்டப்பட்டு உள்ளது.

பாலம் திறந்த பின், மத்திய கைலாஷில் இருந்து மேம்பாலம் ஏறி செல்லும் வாகனங்கள், வேகமாக செல்கின்றன.

ஆனால், திருவான்மியூரில் இருந்து மேம்பாலம் ஏற, வளைந்து செல்ல வேண்டி உள்ளது. அதனால், வேகத்தை குறைத்து மேம்பாலத்தில் ஏற கனரக வாகனங்கள் திணறுகின்றன.

அதேபோல், மேம்பாலத்தின் மைய பகுதியில் இருந்து, சி.எஸ்.ஐ.ஆர்., மற்றும் மத்திய கைலாஷ் நோக்கி செல்லும் பாதைக்கு, எப்படி செல்ல வேண்டும் என தெரியாமல், சில வாகன ஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர்.

அப்போது, வாகனத்தின் வேகத்தை குறைத்து செல்வதால், பின்னால் ஏறி வரும் கனரக வாகனங்கள் வேகம் குறைந்து, பல நேரம் மேம்பாலத்திலேயே நின்று விடுகின்றன. இதனால், திருவான்மியூரில் இருந்து மேம்பாலம் செல்லும் பாதையில் நெரிசல் ஏற்படுகிறது.

சாலை மேம்பாட்டு துறை அதிகாரிகள் கூறியதாவது:

மேம்பாலத்தை, 20 கி.மீ., வேகத்தில் வாகனங்கள் செல்லும் வகையில் வடிவமைத்துள்ளோம். திருவான்மியூரில் இருந்து வளைந்து மேம்பாலம் ஏறுவதால், குடிநீர் லாரி உள்ளிட்ட சில கனரக வாகனங்கள் திணறுகின்றன.

வளைவு பகுதியில் சில பாதசாரிகள் குறுக்கே செல்வதாலும், வாகனங்களின் வேகம் குறைகிறது. டைடல் பார்க் மெட்ரோ சுரங்கப்பாதை பணி முடிந்தால், வளைவு பகுதி அகலப்படுத்தப்படும். அப்போது, இதுபோன்ற பிரச்னை இருக்காது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us