ADDED : அக் 06, 2024 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,
புனித தோமையர்மலை ஆய்வாளர் தலைமையிலான போலீசார், எம்.கே.என்.,சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அசினுார் ஷேக், 26 என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர், 3 கிராம் ஹெராயின் போதை பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து, போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், அரும்பாக்கத்தில், 5 கிராம் மெத்தம்பெட்டமைன் வைத்திருந்த, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகரன், 42 என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 25 ஊசி போடும் சிரஞ்சுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.