sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வீடுக்கான பங்களிப்பு தொகை தவணையில் செலுத்த வசதி

/

வீடுக்கான பங்களிப்பு தொகை தவணையில் செலுத்த வசதி

வீடுக்கான பங்களிப்பு தொகை தவணையில் செலுத்த வசதி

வீடுக்கான பங்களிப்பு தொகை தவணையில் செலுத்த வசதி


ADDED : பிப் 20, 2025 12:19 AM

Google News

ADDED : பிப் 20, 2025 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, பிப். 20-

தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில், நேற்று வீடு ஒதுக்கீடு பெற்ற 712 பேருக்கு, பங்களிப்பு தொகை செலுத்த, எளிய மாத தவணை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மறுகட்டுமான திட்டத்தின் கீழ், திரு.வி.க., நகர் சந்திரயோகி சமாதி திட்டத்தில், 240; சத்தியவாணி முத்துநகர் திட்டத்தில், 438; எழும்பூர் ராதாகிருஷ்ணபுரம் திட்டத்தில், 168 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன.

இவற்றை, கடந்த அக்., 29ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைதொடர்ந்து, மூன்று திட்டங்களிலும் சேர்த்து, 712 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இதில், பயனாளிகள் பங்களிப்பாக சந்திரயோகி சமாதி திட்டத்தில், 83,000 ரூபாயை, மாதம், 500 ரூபாய் வீதம், 20 ஆண்டுகள் எளிய தவணையில் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

ராதாகிருஷ்ணபுரம் மற்றும் சத்தியவாணி முத்துநகர் திட்டத்தில், பயனாளிகள் பங்களிப்பு தொகை 1.50 லட்சம் ரூபாய். இதை மாதம், 625 ரூபாய் வீதம், 20 ஆண்டுகள் செலுத்த, வாரியம் வசதி செய்து கொடுத்துள்ளது. இது, பயனாளிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.






      Dinamalar
      Follow us