ADDED : ஆக 02, 2025 01:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராயபுரம், உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது.
தாய்ப்பால் விழிப்புணர்வு வார விழாவின் ஒரு பகுதியாக, மனித சங்கிலி நடந்தது. கல்லுாரி முதல்வர் மகேஷ் தலைமை வகித்தார். ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரி நுழைவாயில் துவங்கி, பாரதி கலைக்கல்லுாரி வரை நடந்த மனித சங்கிலியில், மருத்துவ கல்லுாரி மாணவ - மாணவியர், பேராசிரியர்கள் என, 250க்கும் மேற்பட்டடோர் பங்கேற்றனர்.
தாய்பாலின் அவசியம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை ஏந்தி சென்றனர். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.