sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பிரிந்து சென்ற மனைவியை தாக்கிய கணவர் கைது

/

பிரிந்து சென்ற மனைவியை தாக்கிய கணவர் கைது

பிரிந்து சென்ற மனைவியை தாக்கிய கணவர் கைது

பிரிந்து சென்ற மனைவியை தாக்கிய கணவர் கைது


ADDED : மார் 21, 2025 12:11 AM

Google News

ADDED : மார் 21, 2025 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பூர், பெரம்பூர் பகுதியில் வசிப்பவர் கஜலட்சுமி, 23. இவருக்கும், அஜய்குமார், 27, என்பவருக்கும், கடந்த ஐந்தாண்டுக்கு முன் திருமணமாகி, ஒரு பெண் குழந்தை உள்ளது.

கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்த கஜலட்சுமி, சில மாதங்களாக தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 15ம் தேதி, மாமியார் வீட்டில் இல்லாத போது, அவரது வீட்டுக்கு சென்ற அஜய்குமார், மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.

அப்போது, அஜய்குமார் தாக்கியதில், கஜலட்சுமிக்கு வலது கண்ணுக்கு கீழே காயம் ஏற்பட்டது. பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கஜலட்சுமிக்கு, மூன்று தையல் போடப்பட்டது.

அதன்பின், அவர் அளித்த புகாரின்படி, அஜய்குமாரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us