ADDED : டிச 01, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எம்.கே.பி.: டிச. 1-: எம்.கே.பி., நகரில், மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர், 72வது பிளாக்கை சேர்ந்தவர் ராஜேஷ், 30. இவருக்கு திருமணமாகி கவுசல்யா, 28, என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
மனைவி கவுசல்யா மீது சந்தேகப்பட்ட ராஜேஷ், அடிக்கடி சண்டையிட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று, வழக்கம் போல் கவுசல்யாவை சந்தேகப்பட்டு தாக்கியதில், முகம், கை, கால்களில் படுகாயமடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து, எம்.கே.பி., நகர் போலீசார் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த ராஜேஷை, நேற்று கைது செய்தனர்.

