sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மனைவியிடம் ஆபாசமாக பேசியவரை 'நையப்புடைத்த' கணவருக்கு வலை

/

மனைவியிடம் ஆபாசமாக பேசியவரை 'நையப்புடைத்த' கணவருக்கு வலை

மனைவியிடம் ஆபாசமாக பேசியவரை 'நையப்புடைத்த' கணவருக்கு வலை

மனைவியிடம் ஆபாசமாக பேசியவரை 'நையப்புடைத்த' கணவருக்கு வலை


ADDED : ஜூலை 09, 2025 12:21 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொளத்துார், கொளத்துார் பகுதியில், நேற்று முன்தினம் மாலை ஐஸ் விற்பனை செய்த நபரிடம், வாலிபர் ஒருவர் மதுபோதையில் ஐஸ் வாங்கி சாப்பிட்டு விட்டு, பணம் தராமல் ஆபாசமாக பேசி சென்றார்.

இதை கொளத்துார், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த காமராஜ், 52, என்பவர் தட்டிக் கேட்டார். ஆத்திரமடைந்த அந்த வாலிபர், காமராஜையும் அவரது மகள் சினேகாவையும் ஆபாசமாக பேசிவிட்டு சென்றார்.

இதை, தன் கணவர் தேவா வந்ததும் சினேகா கூறியுள்ளார். ஆத்திரமடைந்த தேவா, நண்பர்கள் மூவருடன் சென்று அந்த வாலிபரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த அந்த வாலிபர், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொளத்துார் போலீசாரின் விசாரணையில், ஆபாசமாக பேசியது செங்குன்றம், ஸ்ரீ சாய் பாலாஜி நகரைச் சேர்ந்த அய்யனார், 28, என்பது தெரிந்தது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அய்யனாரை தாக்கிய தேவா தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பெண்ணிடம் ஆபாச சைகை

எதிர் வீட்டுக்காரருக்கு 'காப்பு'கொளத்துார் காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயது பெண், கணவரை பிரிந்து தனியாக குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது எதிர்வீட்டில் வசிக்கும் ராஜேஷ், 38, என்பவர், அப்பெண் வெளியே செல்லும் போதெல்லாம், ஆபாச வார்த்தையால் பேசுவதும், சைகை காண்பிப்பதுமாக இருந்துள்ளார். இதை யாரிடமும் கூற முடியாமல் தவித்த அப்பெண் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில், நேற்று முன்தினம் ராஜேஷ் தன் பேன்ட் ஜிப்பை கழற்றி, ஆபாசமாக காட்டியுள்ளார். இது குறித்து அப்பெண் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷை, கைது செய்தனர்.








      Dinamalar
      Follow us