நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்,
கல்பாக்கம் விட்டிலாபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 40; பெயின்டர்.
நேற்று முன்தினம் பணி முடிந்து, இரவு 8:30 மணியளவில், மாம்பாக்கத்தில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றின் அருகே, சாலை ஓரத்தில் துாங்கினார்.
அப்போது அங்கு, கட்டுமான பொருட்கள் விற்பனை கடை சார்ந்த மினி லாரியை, ஓட்டுநர் சிட்டிபாபு என்பவர் பின்னோக்கி இயக்கியுள்ளார்.
எதிர்பாராத விதமாக மினி லாரியின் பின்புற சக்கரத்தில் சுரேஷ் தலை சிக்கி நசுங்கி, சம்பவ இடத்திலேயே பலியானார்.
பள்ளிக்கரணை போலீசார் விசாரிக்கின்றனர்.

