sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நண்பருக்குள் அடிதடி பைக் மாற்றி எரிப்பு

/

நண்பருக்குள் அடிதடி பைக் மாற்றி எரிப்பு

நண்பருக்குள் அடிதடி பைக் மாற்றி எரிப்பு

நண்பருக்குள் அடிதடி பைக் மாற்றி எரிப்பு


ADDED : செப் 28, 2024 12:32 AM

Google News

ADDED : செப் 28, 2024 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியாசர்பாடி, சென்னை, வியாசர்பாடி, 'பி' கல்யாணபுரம் பகுதியை சேர்ந்தவர் அஜீத், 28. இவர், கடந்த 25ம் தேதி நள்ளிரவு, தன் இருசக்கர வாகனத்தை, வீட்டிற்கு அருகே நிறுத்தியிருந்தார். திடீரென அதிகாலையில் அஜீத் பைக் தீப்பற்றி எரிந்தது. அக்கம்பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதுகுறித்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில், வியாசர்பாடி, சி கல்யாணபுரம் பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி, 20 என்பவர் பைக்குக்கு தீ வைத்தது தெரியவந்தது.

வியாசர்பாடியை சேர்ந்த அப்புனு, 24 என்பவருக்கும், விநாயகமூர்த்திக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 25ம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், விநாயகமூர்த்தியை அப்புனு தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விநாயகமூர்த்தி, குடிபோதையில் அப்புனு பைக் என நினைத்து, அஜீத் பைக்கிற்கு தீ வைத்தது விசாரணையில் தெரியவந்தது.

விநாயகமூர்த்தியை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us