/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மருந்து அடிக்காததால் கொசுக்கடி அதிகரிப்பு
/
மருந்து அடிக்காததால் கொசுக்கடி அதிகரிப்பு
ADDED : நவ 05, 2024 12:41 AM
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும், சமீபகாலமாக கொசு மருந்து முறையாக அடிப்பதில்லை. இதனால், கொசு தொல்லை அதிகரித்து, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகின்றன.
இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
தாம்பரம் மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில், பல பகுதிகளில் கொசு மருந்து அடிப்பதே இல்லை. பல இடங்களில் வாரத்திற்கு ஒரு முறையும், சில இடங்களில் தேவைப்படும் போதும் அடிக்கின்றனர்.
ஒரு அட்டவணை வைத்து, ஒவ்வொரு வார்டிலும் முறையாக அடிப்பதில்லை. இதனால், கொசு தொல்லை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மழை துவங்கவுள்ளதால், பொதுமக்கள் நலன் கருதி, 70 வார்டுகளிலும் கொசு மருந்து அடிக்கும் பணியை வேகப்படுத்தி, கொசுவை கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.