sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சுதந்திர தின ஒத்திகை போக்குவரத்து மாற்றம்

/

சுதந்திர தின ஒத்திகை போக்குவரத்து மாற்றம்

சுதந்திர தின ஒத்திகை போக்குவரத்து மாற்றம்

சுதந்திர தின ஒத்திகை போக்குவரத்து மாற்றம்


ADDED : ஆக 07, 2025 12:34 AM

Google News

ADDED : ஆக 07, 2025 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை, கோட்டையில் சுதந்திர தினவிழா, 15ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, நாளை, 11, 13 ஆகிய மூன்று நாட்கள் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளதால், மெரினாவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி நடக்கும் நாட்களில், காலை 6:00 மணி முதல் ஒத்திகை முடியும் வரை, மெரினாவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.

* உழைப்பாளர் சிலை முதல் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வரையிலான காமராஜர் சாலை, ராஜாஜி சாலை மற்றும் கொடி மரச்சாலைகளில், போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படும்

* காமராஜர் சாலையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும், உழைப்பாளர் சிலையிலிருந்து வாலாஜா சாலை - அண்ணாசாலை - முத்துசாமி பாலம் வழியாக பாரிமுனைக்கு செல்லலாம்.

* அண்ணா சாலையில் இருந்து பாரீஸ் கார்னர் நோக்கிச் செல்லும் வாகனங்கள், முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரீஸ் கார்னர் செல்லலாம்.

* ராஜாஜி சாலையில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்ல, பாரிமுனை, வடக்கு கோட்டை பக்க சாலை, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணாசாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை அடையலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us