sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பதவி நீக்க உத்தரவை எதிர்த்து சுயேட்சை கவுன்சிலர் வழக்கு

/

பதவி நீக்க உத்தரவை எதிர்த்து சுயேட்சை கவுன்சிலர் வழக்கு

பதவி நீக்க உத்தரவை எதிர்த்து சுயேட்சை கவுன்சிலர் வழக்கு

பதவி நீக்க உத்தரவை எதிர்த்து சுயேட்சை கவுன்சிலர் வழக்கு


ADDED : ஏப் 03, 2025 12:46 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக கூறி, தாம்பரம் மாநகராட்சி, 40வது வார்டு கவுன்சிலர் ஜெயபிரதீப் உட்பட நான்கு கவுன்சிலர்களை பதவி நீக்கம் செய்து, நகராட்சி நிர்வாகத்துறை செயலர், கடந்த மார்ச் 27ல் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தாம்பரம் கவுன்சிலர் ஜெயபிரதீப் மனு தாக்கல் செய்தார்.

மனுவில், 'தாம்பரம் மாநகராட்சி, மூன்றாவது மண்டல குழு தலைவராக இருந்த தனக்கு எதிராக, கவுன்சிலர்களை கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக செயல்பட்டதாக கூறி, நான் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளேன். தன் விளக்கத்தை கேட்காமல் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ.சத்தியநாராயண பிரசாத், மனுவுக்கு பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை வரும் 21ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.






      Dinamalar
      Follow us