sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 த.வெ.க.,வில் உட்கட்சி பூசல் பெண் பொறுப்பாளர்கள் மோதல்

/

 த.வெ.க.,வில் உட்கட்சி பூசல் பெண் பொறுப்பாளர்கள் மோதல்

 த.வெ.க.,வில் உட்கட்சி பூசல் பெண் பொறுப்பாளர்கள் மோதல்

 த.வெ.க.,வில் உட்கட்சி பூசல் பெண் பொறுப்பாளர்கள் மோதல்


ADDED : நவ 19, 2025 04:24 AM

Google News

ADDED : நவ 19, 2025 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புளியந்தோப்பு: புளியந்தோப்பு, பெரியார் நகரைச் சேர்ந்தவர் கலைச்செல்வி, 44. த.வெ.க.,வில், சென்னை வடக்கு மாவட்ட மகளிர் அணி இணை அமைப்பாளராக உள்ளார்.

இவர், தன் ஆதரவாளர்களுக்கு கட்சி பொறுப்பு கேட்டு, சென்னை வடக்கு மாவட்ட த.வெ.க., செயலரான பல்லவி, 35, என்பவரின் வீட்டிற்கு, நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளார்.

ஆனால், வெகுநேரமாக பல்லவி வீட்டை விட்டு வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கலைச்செல்வி மற்றும் அவரது ஆதரவாளர்கள், பல்லவியின் ஆதரவாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின், அங்கு வந்த பல்லவியும், கலைச்செல்வியும் ஒருவரையொருவர் மாறி மாறி வசைபாடிக்கொண்டதாக தெரிகிறது.

இதையடுத்து, தகாத வார்த்தைகள் பேசி தாக்கியதாக, இரு தரப்பும் மாறி மாறி புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார், இரு தரப்பையும் அழைத்து பேசி, சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

த.வெ.க.,வில் உட்கட்சி பூசலால், இரண்டு பெண் பொறுப்பாளர்கள் மல்லுக்கட்டியது, அப்பகுதி அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.






      Dinamalar
      Follow us