sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போதை பொருள் கடத்திய பெண்ணிடம் விசாரணை

/

போதை பொருள் கடத்திய பெண்ணிடம் விசாரணை

போதை பொருள் கடத்திய பெண்ணிடம் விசாரணை

போதை பொருள் கடத்திய பெண்ணிடம் விசாரணை


ADDED : மார் 15, 2024 12:32 AM

Google News

ADDED : மார் 15, 2024 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரிமுனை, பாரிமுனை, அரண்மனைக்காரன் தெருவில், எஸ்பிளனேடு போலீசார் நேற்று, ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, இளம்பெண்ணும், 16 வயது சிறுமியும், வாலிபர்கள் மூவருடன் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரிக்கச் சென்ற போது, மூன்று இளைஞர்களும் தப்பி ஓடினர். இளம்பெண் மட்டும் சிக்கினார். போலீசார் விசாரித்த போது, அப்பெண் சேலம், வாழப்பாடி, அனுப்பூரைச் சேர்ந்த சரண்யா, 19, என்பதும், சிறுமி சென்னையைச் சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது.

பழைய குற்றவாளியான சின்னா என்பவர், சரண்யாவுடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளார். சேலம் பகுதியில் கிடைக்கும் போதை ஊசி, போதை மாத்திரைகளை சின்னா கேட்க, சரண்யா அவற்றை சென்னைக்கு கொண்டு வந்துள்ளார். சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த அவரிடமிருந்து போதை பொருட்களை வாங்க, சின்னா தன் காதலியான 16 வயது சிறுமி, கூட்டாளிகள் மூவரை அனுப்பியது தெரிந்தது.

எஸ்பிளனேடு போலீசார் வழக்கு பதிந்து, இதுகுறித்து மேலும் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us