sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 பாரதி நேரு தேசிய கலை விழா போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

/

 பாரதி நேரு தேசிய கலை விழா போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

 பாரதி நேரு தேசிய கலை விழா போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

 பாரதி நேரு தேசிய கலை விழா போட்டிகளில் பங்கேற்க அழைப்பு


ADDED : நவ 20, 2025 03:11 AM

Google News

ADDED : நவ 20, 2025 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்: திருவொற்றியூர் பாரதி பாசறை, 41ம் ஆண்டு பாரதி நேரு தேசியக் கலை விழா, இசை, ஓவியம், கவிதை மற்றும் பேச்சு போட்டிகள், வரும் 29ம் தேதி, திருவொற்றியூர், தேரடி, மாங்காடு எல்லப்ப செட்டியார் திருமண மாளிகையில் நடக்கிறது.

அதன்படி, 1 முதல் 5ம் வகுப்பு மாணவ - மாணவியருக்கு, பாரதியார், பாரதிதாசன், கவிமணி, நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்ற தலைப்பில் இசை போட்டி; 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, 'விபத்து இல்லா பயணங்கள்' என்ற தலைப்பில், ஓவிய போட்டியும் நடக்கின்றன.

மேலும், 9 - 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 'மாற்று உலகும் செயற்கை நுண்ணறிவும்' என்ற தலைப்பில், பேச்சுப்போட்டி; 11 - 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, 'எப்போதைக்கு ஒழியும் இப்போதை மயக்கம்' என்ற தலைப்பில் கவிதை போட்டியும் நடத்தப்படுகிறது.

பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பட்டியலை, தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன், நவ., 25க்குள், 'முனைவர் மா.கி.ரமணன், பாரதி பாசறை, 39 /13, கிராமத் தெரு, சோமசுந்தரம் நகர், 4 வது தெரு, திருவொற்றியூர், சென்னை - 19' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு, 94441 82153 / 94442 98396 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us