sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பஸ்சில் 2 மூதாட்டியரிடம் நகை திருட்டு

/

பஸ்சில் 2 மூதாட்டியரிடம் நகை திருட்டு

பஸ்சில் 2 மூதாட்டியரிடம் நகை திருட்டு

பஸ்சில் 2 மூதாட்டியரிடம் நகை திருட்டு


ADDED : ஆக 04, 2025 02:44 AM

Google News

ADDED : ஆக 04, 2025 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:வியாசர்பாடி, ஜெ.ஜெ.ஆர்., நகரைச் சேர்ந்தவர் சாந்தா, 60. இவர், வியாசர்பாடி, சூழ்

புனல்கரை பகுதியில் வசிக்கும், தன் மூன்றாவது மகளான பாக்கியலட்சுமி வீட்டிற்கு, நேற்று சென்றார். அப்போது, தான் அணிந்திருந்த

கம்மல், செயின் உள்ளிட்ட மூன்றரை சவரன் நகைகளை கழற்றி, கைப்பையில் வைத்துள்ளார்.

பின், மகள் வீட்டில் இருந்து தன் வீட்டிற்கு வருவதற்காக, தடம் எண்: 57 மாநகர பேருந்தில் ஏறினார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கைப்பையில் இருந்த நகைகள் திருடு போயிருந்தன. இது குறித்து, எம்.கே.பி.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

அதேபோல, கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் ருக்மணி, 62. இவர், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள அம்மன் கோவிலுக்கு, ரயில் மூலம் சென்று சென்ட்ரலில் இருந்து மாநகர பேருந்தில் ஏறினார். கூட்ட நெரிசல் அதிகம் இருந்ததால் நின்றபடி பயணித்தார்.

முத்தமிழ் நகர் பேருந்து நிலையம் வந்ததும் இறங்கி, சற்று துாரம் நடந்து சென்றபோது, தன் தாலி செயின் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us