ADDED : ஆக 04, 2025 02:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பத்துார்:தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில், கிங்டம் என்ற திரைப் படம், கடந்த வியாழக்கிழமை வெளியானது.
இந்த படத்தில், வில்லனாக இலங்கை தமிழர்களின் தலைவன் கதாபாத்திரத்திற்கு முருகன் என்ற பெயரை வைத்துள்ளனர்.
அதேபோல, இலங்கை தமிழர்களை, கொடியவர்களாக காட்சிப்படுத்தி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, படத்தை திரையிடக்கூடாது எனக்கூறி, அம்பத்துார் முருகன் திரையரங்கில், நாம் தமிழர் கட்சியினர், 50க்கும் மேற்பட்டோர் திரண்டு, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

