/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிருத்திகையால் வெறிச்சோடிய காசிமேடு
/
கிருத்திகையால் வெறிச்சோடிய காசிமேடு
ADDED : ஜூலை 21, 2025 03:24 AM

காசிமேடு, :ஆடி கிருத்திகை விழாவையொட்டி, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று, மக்கள் குறைந்தளவில் வந்ததால் வெறிச்சோடி காணப்பட்டது.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்தோர் ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருவர். இதனால், அதிகாலை முதலே காசிமேடு மீன்பிடி துறைமுகம் களைகட்டும்.
ஆனால், நேற்று ஆடி கிருத்திகை என்பதால், பெரும்பாலானோர் விரதம் இருந்து முருகனை வழிபடுவது வழக்கம். இதன் எதிரொலியாக, காசிமேடில் மக்கள் குறைந்த அளவே வந்தனர்.
அதேநேரம், வழக்கத்திற்கு மாறாக, குறைந்தளவு விசைப்படகுகள் தான் நேற்று கரை திரும்பின. மீன் வரத்தும் குறைவாகவே இருக்க, காசிமேடு மீன்பிடித்துறைமுகம் களையிழந்து காணப்பட்டது. மீன் விலையும், கடந்த வாரங்களை ஒப்பிடுகையில் சற்று அதிகமாகவே இருந்தது.
மீன் விலை நிலவரம்
வகை	கிலோ (ரூ.)
வஞ்சிரம்	1,200 - 1,300
கறுப்பு வவ்வால்	400 - 500
வெள்ளை வவ்வால்	1,000 - 1,200
பாறை	300 - 400
கடல் விரால்	500 - 600
சங்கரா	400 - 500
தும்பிலி	300 - 400
கானாங்கத்த	200 - 250
கடம்பா	300 - 400
செருப்பு	250 - 300
கிளிச்ச	100 - 150
நெத்திலி	100 - 150
வாலை	50 - 100
இறால்	300 - 400
டைகர் இறால்	1,000 - 1,100
நண்டு	300 - 400

