sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கவுரி அலங்காரத்தில் வடிவுடையம்மன்

/

கவுரி அலங்காரத்தில் வடிவுடையம்மன்

கவுரி அலங்காரத்தில் வடிவுடையம்மன்

கவுரி அலங்காரத்தில் வடிவுடையம்மன்


ADDED : அக் 07, 2024 01:27 AM

Google News

ADDED : அக் 07, 2024 01:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்:திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவிலில் 3ம் தேதி இரவு, கொடியேற்றத்துடன், நவராத்திரி திருவிழா துவங்கியது.

நவராத்திரியின் பத்து நாட்களிலும், உற்சவ தாயார் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி, மாடவீதி உற்சவம் நடைபெறும்.

அதன்படி, நான்காம் நாளான நேற்று முன்தினம் இரவு, அடர் நீல பட்டு உடுத்தி, கவுரி அலங்காரத்தில் எழுந்தருளிய தாயார், மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதே போல், தேரடி, சன்னதி தெருவில் உள்ள, அகத்தீஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோவிலில், நான்காம் நாள் நவராத்திரி விழாவில், உற்சவ அம்மனுக்கு, கவுரி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

திருவொற்றியூர் - அஜாக்ஸ், பொன்னியம்மன் கோவிலில், உற்சவ அம்மன், ராஜ ராஜேஸ்வரியாக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மணலியில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, திருவுடைநாதர் சமேத திருவுடைநாயகி கோவிலில், நான்காம் நாளில், மூலவர் தாயாருக்கு, மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

நவராத்திரி திருவிழாக்களில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us