ADDED : ஜூன் 28, 2025 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லிவாக்கம்:ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், வில்லிவாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில், கடந்த 25ம் தேதி, முதல் கால பூஜையுடன், கும்பாபிஷேக விழா துவங்கியது.
தொடர்ந்து, நேற்று காலை 8:00 மணிக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இரவு 7:30 மணிக்கு, சுவாமி திருவீதி உலா புறப்பாடும் நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.