sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மின்வேலியில் சிக்கி கூலித்தொழிலாளி பலி

/

மின்வேலியில் சிக்கி கூலித்தொழிலாளி பலி

மின்வேலியில் சிக்கி கூலித்தொழிலாளி பலி

மின்வேலியில் சிக்கி கூலித்தொழிலாளி பலி


ADDED : ஜூலை 18, 2025 12:26 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூணாம்பேடு, பைக்கில் சென்றவர் நிலைதடுமாறி வயல்வெளியில் விழுந்து, அங்கு காட்டுப் பன்றிக்காக வைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி பலியானார்.

செங்கல்பட்டு மாவட்டம், சூணாம்பேடு அடுத்த சின்னகளக்காடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பன், 49: கூலித்தொழிலாளி.

இவர் வேலைக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில் தன், 'பஜாஜ் டிஸ்கவர்' பைக்கில் வீடு திரும்பினார். சின்னகளக்காடி அருகே சென்றபோது, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் விழுந்தது.

இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற செல்லப்பன் தடுமாறி, அருகே உள்ள வயல்வெளியில் விழுந்தார். அங்கு, காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து, சூணாம்பேடு போலீசார் வழக்கு பதிந்து, நிலத்தின் உரிமையாளரான நாகமணி, மின்வேலி அமைக்க மின் இணைப்பு தந்து உதவிய நடராஜன், 60, ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us