sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

துபாய் விமானம் மீது மீண்டும் 'லேசர் ஒளி' சென்னையில் விமான பாதுகாப்பு கேள்விக்குறி

/

துபாய் விமானம் மீது மீண்டும் 'லேசர் ஒளி' சென்னையில் விமான பாதுகாப்பு கேள்விக்குறி

துபாய் விமானம் மீது மீண்டும் 'லேசர் ஒளி' சென்னையில் விமான பாதுகாப்பு கேள்விக்குறி

துபாய் விமானம் மீது மீண்டும் 'லேசர் ஒளி' சென்னையில் விமான பாதுகாப்பு கேள்விக்குறி

1


ADDED : ஜூன் 07, 2025 12:24 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 12:24 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, துபாயில் இருந்து 304 பயணியருடன் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம், நேற்று முன்தினம் இரவு, சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.

சென்னையை நெருங்கிய விமானம், தரையிறங்க தாழ்வான பகுதியில் பறக்க துவங்கியபோது, எதிர் திசையில் இருந்து பச்சை நிற லேசர் ஒளி விமானத்தின் மீது அடிக்கப்பட்டது.

இதனால் விமானி, நிலை குலைந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் அவர், சாதுர்யமாக செயல்பட்டு, விமானத்தை மீண்டும் உயரத்தில் பறக்க செய்தார். இதுகுறித்து, விமான நிலைய தகவல் கட்டுப்பாட்டு கோபுரத்துக்கு உடனடியாக புகார் தெரிவித்தார்.

பி.சி.ஏ.எஸ்., மற்றும் ஏர்போர்ட் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதற்கிடையே எந்த பிரச்னையும் இல்லாமல் பத்திரமாக விமானம் தரையிறங்கியது.

சம்பந்தப்பட்ட போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது. விமான நிலையம் சுற்றியுள்ள மற்ற காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 25ம் தேதி, இதே விமானத்தின் மீது மர்ம நபர்கள் லேசர் ஒளி அடித்தனர். இப்போது மீண்டும் அதே சம்பவம் அரங்கேறியுள்ளது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தும், இது மாதிரியான சம்பவங்கள் தொடர்வது, சென்னையில் விமான பாதுகாப்புக்கு கேள்விக்குறியாக மாறி உள்ளது.






      Dinamalar
      Follow us