/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீதிமன்றத்தை புறக்கணித்த வக்கீல்கள்
/
நீதிமன்றத்தை புறக்கணித்த வக்கீல்கள்
ADDED : டிச 04, 2025 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பத்துார்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள் ள மாவட்ட அளவிலான விசாரணை நீதிமன்றங்களில், இம்மாதம் 1ம் தேதி முதல் இணையவழி பதிவேற்றம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுதும் உள்ள வழக்கறிஞர்கள் நேற்று, நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
அம்பத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், அம்பத்துார் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் அம்பத்துார் அட்வகேட் அசோசியேஷனைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வழ க்கறிஞர்கள், நேற்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

