/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீசுக்கு 'டிமிக்கி' கொடுத்தவர் கைது
/
போலீசுக்கு 'டிமிக்கி' கொடுத்தவர் கைது
ADDED : டிச 04, 2025 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எம்.கே.பி.நகர்: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் போலீசுக்கு டிமிக்கி கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
செங்குன்றம், காவாங்கரை பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வர், 20. இவர் மீது, பல குற்ற வழக்குகள் உள்ளன.
கடந்த 2023ல், குற்ற வழக்கிற்காக சிறை சென்ற நிலையில், ஜாமினில் வெளியே வந்தார்.
பின் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார்.
இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து எம்.கே.பி.நகர் போலீசார், புவனேஸ்வரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

