sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

செம்பரம்பாக்கம் குழாயில் கசிவு ஆற்காடு சாலையில் தேங்கிய குடிநீர்

/

செம்பரம்பாக்கம் குழாயில் கசிவு ஆற்காடு சாலையில் தேங்கிய குடிநீர்

செம்பரம்பாக்கம் குழாயில் கசிவு ஆற்காடு சாலையில் தேங்கிய குடிநீர்

செம்பரம்பாக்கம் குழாயில் கசிவு ஆற்காடு சாலையில் தேங்கிய குடிநீர்


ADDED : ஜன 09, 2025 02:53 AM

Google News

ADDED : ஜன 09, 2025 02:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வளசரவாக்கம்:வளசரவாக்கம் ஆற்காடு சாலையில், கோடம்பாக்கம் மற்றும் பூந்தமல்லி ஆகிய பகுதிகளை இணைக்கும் விதமாக, மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன.

வளசரவாக்கம் ஆற்காடு சாலையின் கீழ், 6 அடி ஆழத்தில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, சென்னைக்கு குடிநீர் வழங்கும், 1,200 மி.மீ., விட்டம் கொண்ட குழாய் செல்கிறது.

இந்நிலையில், வளசரவாக்கம் -அரசு அதிதிராவிடர் நலத்துறை பள்ளி அருகே, இந்த குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு, சாலையில் குடிநீர் தேங்கி வருகிறது.

இதனால், நேற்று காலை அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மெட்ரோ ரயில் பணியின் போது, குடிநீர் குழாய் சேதமடைந்திருக்கலாம் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே இடத்தில், கடந்த ஆண்டும் குடிநீர் குழாய் உடைந்து, சாலையில் தண்ணீர் தேங்கியது. இதையடுத்து, குடிநீர் குழாயை சீர் செய்யும் பணியில், குடிநீர் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us