sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பழவேற்காடில் சுற்றுலா படகு இயக்கினால் உரிமம் ரத்து

/

பழவேற்காடில் சுற்றுலா படகு இயக்கினால் உரிமம் ரத்து

பழவேற்காடில் சுற்றுலா படகு இயக்கினால் உரிமம் ரத்து

பழவேற்காடில் சுற்றுலா படகு இயக்கினால் உரிமம் ரத்து


ADDED : பிப் 22, 2024 12:52 AM

Google News

ADDED : பிப் 22, 2024 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழவேற்காடு, பழவேற்காடு ஏரியில் கடந்த, 2011ல், படகு சவாரி சென்ற சுற்றுலா பயணியர் 22 பேர், படகு கவிழ்ந்து, நீரில் மூழ்கி இறந்தனர்.

இதைத் தொடர்ந்து, அங்கு படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி ஏரியில் விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில், சுற்றுலா பயணியர் படகு சவாரி செய்து வருகின்றனர்.

ஏரியும், கடலும் இணையும் முகத்துவாரப் பகுதிக்கு செல்வோர், அங்கு ஆபத்தான செய்கைகளில் ஈடுபடுகின்றனர். இதனால், அவ்வப்போது உயிரிழப்புகளும் தொடர்கின்றன.

சமீப காலமாக இளைஞர்கள் படகு சவாரி செய்து, தீவுப்பகுதிகளில் இரவு முழுதும் தங்கி உல்லாசமாக இருந்துவிட்டு, மறுநாள் திரும்புகின்றனர்.

இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர் புகார்கள் வந்தன.

இந்நிலையில், மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன், அனைத்து மீனவ கிராம நிர்வாகிகளுக்கும் எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பழவேற்காடு பகுதிக்கு வரும் சுற்றுலா பயணியரை, பகல் மற்றும் இரவு நேரங்களில் படகு சவாரிக்கு அழைத்து செல்வதாக புகார்கள் வந்துள்ளன.

மீனவர்கள் சுற்றுலா பயணியரை, படகு சவாரிக்கு அழைத்துச் செல்ல வேண்டாம். யாரேனும் மீறி அழைத்துச் செல்வது தெரிய வந்தால், அந்த படகின் பதிவு மற்றும் உரிமம் ரத்து செய்யப்படும்.

படகும் பறிமுதல் செய்து நிறுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us