sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மதுபாட்டில் வயிற்றில் குத்தி லாரி ஓட்டுனர் பரிதாப பலி

/

மதுபாட்டில் வயிற்றில் குத்தி லாரி ஓட்டுனர் பரிதாப பலி

மதுபாட்டில் வயிற்றில் குத்தி லாரி ஓட்டுனர் பரிதாப பலி

மதுபாட்டில் வயிற்றில் குத்தி லாரி ஓட்டுனர் பரிதாப பலி


ADDED : ஜூன் 01, 2025 09:59 PM

Google News

ADDED : ஜூன் 01, 2025 09:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணலி:பெரம்பலுார் மாவட்டம், அடக்கம்பட்டியைச் சேர்ந்தவர் தாணு, 31; ராயபுரத்தில் உள்ள எஸ்.வி.கே., டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்தார்.

நேற்று மதியம், மணலிபுதுநகர் அருகே டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு, மதுபான பாட்டில் ஒன்றை வாங்கி, இடுப்பில் சொருகிக் கொண்டு வந்துள்ளார்.

பொன்னேரி நெடுஞ்சாலை, ஆண்டார்குப்பம் சந்திப்பு - எலந்தனுார் அணுகு சாலை நடந்து சென்றபோது, போதையில் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இடுப்பில் சொருகி வைத்திருந்த மதுபாட்டில் உடைந்ததுடன், கண்ணாடி துண்டுகள் வயிற்றில் குத்தியது. பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போகும் வழியிலேயே தாணு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து, மணலி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us