ADDED : மார் 29, 2025 03:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆதம்பாக்கம்:தடை செய்யப்பட்ட லாட்டரி விற்கப்படுவதாக வந்த புகாரையடுத்து, ஆதம்பாக்கம், பாலகிருஷ்ணபுரம் பிரதான சாலை பகுதியை, போலீசார் கண்காணித்து வந்தனர்.
அப்போது, வெளி மாநில லாட்டரி சீட்டு எண்களை எழுதிக்கொடுத்து விற்பனை செய்து கொண்டிருந்த, ஆதம்பாக்கம், தெற்கு பிரதான சாலையை சேர்ந்த சீனிவாசன், 48, என்பவர் சிக்கினார்.
கைதான அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.