/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்லுாரிகளுக்கான டி - 20 கிரிக்கெட் லயோலா ஐகாம் அணி 'சாம்பியன்'
/
கல்லுாரிகளுக்கான டி - 20 கிரிக்கெட் லயோலா ஐகாம் அணி 'சாம்பியன்'
கல்லுாரிகளுக்கான டி - 20 கிரிக்கெட் லயோலா ஐகாம் அணி 'சாம்பியன்'
கல்லுாரிகளுக்கான டி - 20 கிரிக்கெட் லயோலா ஐகாம் அணி 'சாம்பியன்'
ADDED : ஏப் 15, 2025 11:47 PM

சென்னை, ஆர்.எம்.கே., பொறியியல் கல்லுாரி சார்பில், மஞ்சுளா முனிரத்தினம் நினைவு கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள், திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையில் உள்ள கல்லுாரி மைதானத்தில், நேற்று நிறைவடைந்தன.
இதில், ஸ்ரீவெங்கடேஸ்வரா, அண்ணா பல்கலை, ஆர்.எம்.கே., - ஆர்.எம்.டி., - சத்தியபாமா, சவீதா, வி.ஐ.டி., மற்றும் லயோலா உள்ளிட்ட 19 கல்லுாரி அணிகள் பங்கேற்றன.
நேற்று காலை நடந்த இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற லயோலா ஐகாம் அணி, 20 ஓவர்களில், ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 157 ரன்களை அடித்தது. அணியின் வீரர் வீரா விஷ்வா, 48 பந்துகளில் 66 ரன்களை அடித்தார்.
அடுத்து பேட்டிங் செய்த ஆர்.எம்.கே., பொறியியல் கல்லுாரி, 20 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 123 ரன்களுக்குள் சுருண்டது. இதனால், 34 ரன்கள் வித்தியாசத்தில், லயோலா ஐகாம் அணி வெற்றி பெற்றது.
முன்னதாக நடந்த மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில், டாஸ் வென்ற சத்தியபாமா கல்லுாரி அணி, 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு, 120 ரன்களை அடித்தது.
அடுத்து களமிறங்கிய சாய்ராம் கல்லுாரி அணி, 17.1 ஓவர்களில், ஆல் அவுட் ஆகி, 89 ரன்கள் மட்டுமே அடித்து, 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஆர்.எம்.கே., கல்விக் குழுமத்தின் தலைவர் ஆர்.எஸ்., முனிரத்தினம், துணை தலைவர் கிஷோர், ஆலோசகர் பழனிசாமி, முதல்வர் முகமது ஜுனைத் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

