/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குழந்தைகள் ஆபாச வீடியோ மதுரை இளைஞர் கைது
/
குழந்தைகள் ஆபாச வீடியோ மதுரை இளைஞர் கைது
ADDED : டிச 28, 2024 02:21 AM

சென்னை:சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில், கடந்த 4ம் தேதி புகார் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
சமூக வலைதளங்களான எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில், 'சிக்னல்' என்ற மொபைல் செயலியில், குழுக்களை ஆரம்பித்து, குழந்தைகள் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கா ரகுநாத் ரெட்டி, 22, என்பவர், ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டது தெரியவந்தது. கடந்த, 10ம் தேதி வெங்கா ரகுநாத் ரெட்டியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மேலும், வழக்கில் தொடர்புடைய கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீஹரி, 23, என்பவரை, 21ம் தேதி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய மதுரையைச் சேர்ந்த நவீன்ஷங்கர், 25 என்பவரை, போலீசார் நேற்று கைது செய்து, மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.

