sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

டாக்டர் வீட்டில் 66 சவரன் திருடிய பணிப்பெண் கைது

/

டாக்டர் வீட்டில் 66 சவரன் திருடிய பணிப்பெண் கைது

டாக்டர் வீட்டில் 66 சவரன் திருடிய பணிப்பெண் கைது

டாக்டர் வீட்டில் 66 சவரன் திருடிய பணிப்பெண் கைது


ADDED : செப் 27, 2024 12:38 AM

Google News

ADDED : செப் 27, 2024 12:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர், அண்ணா நகர், சாந்தி காலனி 14வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் கோகுல், 35. இவரது மனைவி பத்மஸ்ரீ, 30; டாக்டர். நேற்று முன்தினம் பத்மஸ்ரீ, உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு செல்ல, வீட்டில் வைத்திருந்த நகைகளை எடுத்துள்ளார்.அதில், 66 சவரன் நகைகள் மாயமானது தெரிந்தது.

அதிர்ச்சியடைந்த அவர், வீட்டில் இரு மாதங்களுக்கு முன்புவரை பணிபுரிந்த பணிப்பெண் மீது சந்தேகம் இருப்பதாக, அண்ணா நகர் போலீசில் புகார் அளித்தார்.

விசாரணையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வினோதினி, 32, என்பவர், பத்மஸ்ரீ வீட்டில் வேலை செய்து, சில மாதங்களுக்கு முன் வேலையில் இருந்து நின்றுள்ளார்.

வினோதினியை, நேற்று முன்தினம் இரவு கைது செய்து விசாரித்ததில், சிறுக சிறுக நகைகளை திருடியதாக ஒப்புக்கொண்டார்.

திருடிய நகைகளில் 20 சவரனை அடகு வைத்தும், 20 சவரன் நகைகளை விற்றும், பணத்தை செலவு செய்துள்ளார். அவரது வீட்டில் இருந்த, 20 சவரன் நகைகளை, போலீசார் பறிமுதல் செய்து, வினோதினியை நேற்று சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us