ADDED : அக் 23, 2025 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தண்டையார்பேட்டை: அக். 23-: தண்டையார்பேட்டை, சிவாஜி நகர் ரயில்வே தண்டவாளம் அருகில் உள்ள மழைநீர் கால்வாயில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதப்பதாக, ஆர்.கே.நகர் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இறந்தவர் குறித்து விசாரிக்கின்றனர்.