தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பேருந்து டிரைவரை தாக்கியவர் கைது

பேருந்து டிரைவரை தாக்கியவர் கைது

பேருந்து டிரைவரை தாக்கியவர் கைது


ADDED : ஜூன் 12, 2025 12:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2025 12:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரம்பூர் :கொளத்துாரை சேர்ந்தவர் புஷ்பலிங்கம், 25. இவர், அரசு போக்குவரத்து கழக மாநகர பேருந்தில் டிரைவராக உள்ளார். நேற்று முன்தினம் மதியம், தடம் எண் 29ஏ பேருந்தை, அண்ணா சதுக்கத்தில் இருந்து பெரம்பூர் நோக்கி ஓட்டி சென்றார்.

ஓட்டேரி பிரிக்ளின் சாலையில் செல்லும்போது, அவ்வழியே உடன் வந்த, 'டாடா ஏஸ்' சரக்கு வாகனத்தின்மீது, பேருந்து உரசி சென்றது. இதனால், புஷ்பலிங்கத்தை, சரக்கு வேன் டிரைவர் தகாத வார்த்தையால் திட்டி தாக்கினார்.

தாக்குதலில் காயமடைந்த புஷ்பலிங்கத்தை பயணியர் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேன் டிரைவரை பிடித்து, தலைமை செயலக குடியிருப்பு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தலைமை செயலக குடியிருப்பு போலீசார் நடத்திய விசாரணையில், பேருந்து டிரைவரை தாக்கியது, ஓட்டேரியை சேர்ந்த செந்தில்குமார், 49 என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us