sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வியாபாரியிடம் ரூ.3 கோடி மோசடி செய்தவர் கைது

/

வியாபாரியிடம் ரூ.3 கோடி மோசடி செய்தவர் கைது

வியாபாரியிடம் ரூ.3 கோடி மோசடி செய்தவர் கைது

வியாபாரியிடம் ரூ.3 கோடி மோசடி செய்தவர் கைது


ADDED : ஜன 13, 2024 12:09 AM

Google News

ADDED : ஜன 13, 2024 12:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன்; பழ வியாபாரி. இவர், சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசில் புகார் ஒன்றை அளித்து இருந்தார்.

அதில், எனக்கு அறிமுகமான சுரேஷ் மற்றும் ஸ்ரீதர் ஆகிய இருவரும், சீன நாட்டிலிருந்து 100 கோடி ரூபாய் நிலக்கரி,'ஆர்டர்' கிடைத்துள்ளது. 3 கோடி ரூபாய் கொடுத்தால், 6 கோடி ரூபாய் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறினர்.

இதற்கு 'செக்யூரிட்டி'யாக, சுரேஷ் பெயரில் உள்ள ஆவணங்களையும், அவரது மனைவி ஈஸ்வரி பெயரிலுள்ள அசல் ஆவணங்களையும் தருவதாக கூறினர்.

இதை நம்பி, 2.97 கோடி ரூபாயை அனுப்பினேன். பணத்தை பெற்றுக்கொண்ட இருவரும், என்னை ஏமாற்றி விட்டனர். இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

புகாரின்படி, நம்பிக்கை மோசடி ஆவண குற்றப் பிரிவு போலீசார் தனிப்படை அமைத்தனர்.

நேற்று முன்தினம், சென்னை ரிப்பன் மாளிகை அருகே, இதில் தொடர்புள்ள சுரேஷ், 53, என்பவரை மடக்கிப் பிடித்தனர். பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us