sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5.50 லட்சம் சுருட்டியவர் கைது

/

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5.50 லட்சம் சுருட்டியவர் கைது

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5.50 லட்சம் சுருட்டியவர் கைது

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5.50 லட்சம் சுருட்டியவர் கைது


ADDED : ஜூலை 13, 2025 12:16 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 12:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, 5.50 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை, போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், அரக்கோணம், இச்சிப்புத்துார் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 26; தனியார் நிறுவன ஊழியர். கடந்த 2024 ஏப்ரல் மாதம், அவரது நண்பர்கள் வாயிலாக, சேஷாத்ரி, 38, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக, கார்த்திகேயனிடம் ஆசை வார்த்தை கூறிய சேஷாத்ரியை நம்பி, அவரது நண்பர்கள் யுகேஷ் மற்றும் ஜெகன் ஆகியோருடன் சேர்ந்து, 5.50 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்.

பணத்தை வாங்கி கொண்ட சேஷாத்ரி, வேலை வாங்கி தராமல் தலைமறைவானார். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திகேயன், கடந்த அக்., மாதம் 21ம் தேதி, ஆவடி போலீசில் புகார் அளித்தார்.

இது குறித்து விசாரித்த ஆவடி போலீசார், தலைமறைவாக இருந்த ஆவடி, காமராஜர் நகரைச் சேர்ந்த சேஷாத்ரியை, நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோல், மேலும் பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி, 13 லட்சம் ரூபாய் வரை அவர் மோசடியில் ஈடுபட்டது, விசாரணையில் தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us